"சுமந்திரனின் பெயரை நிராகரித்த விடுதலைப் புலிகளின் தலைவர்" (Video)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் சுமந்திரனின் பெயர் நிராகரிக்கப்பட்டிருந்ததாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அன்றைய காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் சுமந்திரனின் பெயர் நிராகரிக்கப்பட்டிருந்தது.
அதாவது சம்பந்தன் கொடுத்த பெயர் பட்டியலில் சுமந்திரனும் இடம்பெற்றிருந்தார், அப்போது அவரது பெயர் நிராகரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அத்தகைய மனிதர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோக உரிமையை பெற்றுக் கொண்டு இப்போது ஆயுதக் குழுக்கள் இங்கே இல்லை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இல்லை, கொலையாளிகள் இங்கே இல்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசியல் தலைவர்களின் தவறுகள் தான் மிக முக்கியமானது. இந்த ஆயுதக்குழுக்களுடன் மேற்கொள்ளப்பட்ட சண்டைகளில் இடம்பெற்ற கொலைகள் ஒன்று இரண்டாகவோ அல்லது நூறு, ஆயிரமாகவோ காணப்படலாம்.
ஆனால் இவர்கள் இணைந்து கொண்டு ஒட்டு மொத்த தமிழினத்தையும் அழிக்கும் வேலைகளை செய்கிறார்கள் என கூறியுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 12 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam