டெல்லியில் இலங்கை தொடர்பில் உயர்மட்ட சந்திப்புக்கள் (Video)
13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்த இந்தியா முழுமையான அழுத்தத்தை கொடுக்கவில்லை என்று கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“உண்மையில் இந்திய அரசு 13 ஆவது திருத்தம் நடைமுறைபடுத்த வேண்டும் என்று எப்போதோ முழுமையான அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத்திருக்கலாம்.
இதில் நேரடியாக இந்தியா தலையிட வேண்டிய தேவையும் இல்லை. மாறாக இந்தியா தான் இலங்கைக்கு செய்யும் உதவிகளை நிறுத்த போவதாக கூறி இருந்தாலே இலங்கை இந்திய அரசிடம் மண்டியிட வேண்டிய ஒரு நிலைமை வந்திருக்கும்.
பெரும்பாலும் இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு அனைத்து பொருட்களும் கொண்டுவரப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் பொருளாதார தடை விதிக்க போவதாக கூறி இருந்தாலே போதும்.
இப்படியான பின்னணியிலும் இந்தியா 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்த முழுமையான அழுத்தத்தை கொடுக்கவில்லை.”என தெரிவித்துள்ளார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 8 மணி நேரம் முன்
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri