டெல்லியில் இலங்கை தொடர்பில் உயர்மட்ட சந்திப்புக்கள் (Video)
13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்த இந்தியா முழுமையான அழுத்தத்தை கொடுக்கவில்லை என்று கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,“உண்மையில் இந்திய அரசு 13 ஆவது திருத்தம் நடைமுறைபடுத்த வேண்டும் என்று எப்போதோ முழுமையான அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத்திருக்கலாம்.
இதில் நேரடியாக இந்தியா தலையிட வேண்டிய தேவையும் இல்லை. மாறாக இந்தியா தான் இலங்கைக்கு செய்யும் உதவிகளை நிறுத்த போவதாக கூறி இருந்தாலே இலங்கை இந்திய அரசிடம் மண்டியிட வேண்டிய ஒரு நிலைமை வந்திருக்கும்.
பெரும்பாலும் இந்தியாவிலிருந்து தான் இலங்கைக்கு அனைத்து பொருட்களும் கொண்டுவரப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் பொருளாதார தடை விதிக்க போவதாக கூறி இருந்தாலே போதும்.
இப்படியான பின்னணியிலும் இந்தியா 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்த முழுமையான அழுத்தத்தை கொடுக்கவில்லை.”என தெரிவித்துள்ளார்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam