இலங்கையின் இராணுவ புலனாய்வை செயலிழக்கச் செய்த அமெரிக்கா! உண்மைகள் அம்பலம்(Video)
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற கலவரங்களைப் பொறுத்தமட்டில், இராணுவத்தினர் பெரியளவில் அதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கையிலோ அல்லது எதிர்வினையாற்றும் நடவடிக்கையிலோ தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
அப்போது ஒரு கேள்வி எழுந்தது, அரசாங்கம் தான் அதனை தடுத்து வைத்திருக்கின்றதா என்று. ஆனால் தற்போதைய உள்ளக தகவல்களின் படி அரசாங்கம் கட்டளைகளை கொடுத்த போதும் இராணுவம் அதனைப் பின்பற்றவில்லை என்பது வெளிப்படையாக தெரியவருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குரிய காரணம் என்னவென்றால் சவேந்திர சில்வாவைப் பொறுத்தவரையில் போர்க்குற்றம் தொடர்பில் அவர் மீது வழக்குகள் உள்ளன.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில், அமெரிக்கா ஒருவர் மீது அழுத்தங்களைக் கொண்டு வருவதென்பது முதலில் அவரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதுதான் அமெரிக்காவின் திட்டம். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சரத் பொன்சேகாவின் மீதும் அமெரிக்கா அவ்வாறான ஒரு அழுத்தத்தைத் தான் கொண்டு வந்தது என அவர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri