ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டது கோட்டாபய அரசு
இருக்கின்ற சூழ்நிலையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பான பொறுப்பை உதய கம்மன்பில மீது சுமத்துவது ஓரளவிற்கு அரசாங்கத்தை தப்பிக்கவிடுவதற்கான செயற்பாடு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அமெரிக்காவின் சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்காலத்திலும் அது அவ்விதமாக வர்ணிக்கப்படலாம். இதன்காரணமாக எதிர்க்கட்சியினரின் செயல்பாடு என்ற நோக்கிலிருந்து பார்க்கும் போது இதை புத்திசாலிதனமான செயற்பாடாக தான் கருதவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,