இலங்கை இராணுவத்தின் ஒவ்வொரு நகர்வையும் உளவு பார்த்த அமெரிக்கா! தரையிறங்க தயாரான இந்திய இராணுவம் (Video)
இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னால் இருந்தது அமெரிக்காவே என பிரித்தானியாவிலிருக்கும் கலாநிதி பிரபாகரன் (இராணுவ ஆய்வாளர்) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஆட்சி மாற்றத்திற்கு பின்னால் இருந்தது அமெரிக்கா. அமெரிக்காவிற்கு ஆதரவாக தான் சவேந்திர சில்வா இருந்திருக்கிறார்.
அவரின் நடவடிக்கைகளை பார்த்தால் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு தான் அவர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரும் இராணுவத்தை களமிறக்கவில்லை.
அதேநேரம் State Department பகிரங்கமாக அறிவித்துள்ளது, நாம் இலங்கை இராணுவத்தின் ஒவ்வொரு நகர்வையும் இரவு பகலாக அவதானிக்கிறோம் என.
எனினும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் அமெரிக்கா சார்பானது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்திய இராணுவம் தரையிறங்க தயாராக இருந்தமை உள்ளிட்ட இன்னும் பல முக்கிய தகவல்களுடன் வருகிறது இந்த காணொளி,
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri