கேரளா கஞ்சாவுடன் இளைஞர்கள் இருவர் கைது! (Photos)
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்ற இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று (10) இரவு 9.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவில் இருந்து கொழும்பு நோக்கி மகேந்திரா ரக வாகனத்தில் கஞ்சாவினை கடத்தி சென்ற போது பூவே சோதனைச்சாவடியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட இராணுவம் மற்றும் பொலிஸார் வாகனத்தில் பயணித்த இரு இளைஞர்களை 22 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பை சேர்ந்த 22, 39 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
