கூர்மையான ஆயுதங்களால் இரண்டு பெண்கள் அடித்துக் கொலை
ஹுங்கம, அத்பட்டுவ பிரதேசத்தில் வீடு ஒன்றுக்குள் கூர்மையான ஆயுதத்தில் தாக்கப்பட்டு பெண்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் வசித்த 39 மற்றும் 67 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 67 வயதுடைய பெண்ணின் கணவர் ஹுங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற கத்தி ஒன்றும் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மன ரீதியான பாதிப்புக்குள்ளாகிய ஒருவராகும் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த 39 வயதுடைய பெண் 67 வயதுடைய பெண்ணின் மருமகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹுங்கம பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri