இந்தியாவில் சினிமா பாணியில் மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை தம்பதிக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குறித்த தம்பதி போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு பெற்றதுடன், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் பொரகஸ் பகுதியை சேர்ந்த முகமது யாசிர் என்ற 45 வயதுடைய நபர் மற்றும் 35 வயதான அவரது மனைவி பாரிகா ரிஸ்மியா ஆகியோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்கள்
இந்த தம்பதிக்கு அடைக்கலம் வழங்கி, போலி ஆவணங்கள் தயார் செய்ய உதவிய ராமநாதபுரம் மாவட்டத்தின் என்மனங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த அப்துல் ரஷீத் என்ற 55 வயதுடைய நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், அப்துல் ரஷீத் மலேசிய குடியுரிமை பெற்றவர் என்றும், அங்கு தொழிலை நடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர் தனது நிறுவனத்தில் பணிபுரிந்த முகமது யாசிருடன் பழகி, அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார்.
தனது தொழிலை மேம்படுத்துவதற்காக முகமது யாசிரை அழைத்து வந்து, அவர்களை தனது உறவினரின் வீட்டில் தங்க வைத்துடன், இலங்கை தம்பதியினர் ஆவணங்களைப் பெற உதவியதாக கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் உச்சிப்புளி என்ற பகுதிக்கு அருகே வசித்த ஒரு குடும்பத்தின் ரேஷன் அட்டையில் இலங்கை தம்பதியரின் தங்கள் பெயர்களை இணைத்து, அதன் மூலம் போலி ஆதார் அட்டைகளை பெற்றுள்ளனர்.
இந்திய குடிமக்கள்
மேலும் அரச ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, இந்திய குடிமக்கள் என்று கூறி இந்திய கடவுச்சீட்டுகளையும் இவர்கள் பெற்றுள்ளனர்.
முகமது யாசிர் தனது பெயரில் இல்லாமல், அப்துல் ரஷீத்தின் உறவினர் பெயரில் ஆறு சிம் அட்டை பெற்றுப் பயன்படுத்தியுள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முகமது யாசிர் தான் வைத்திருந்த ஒரு இந்திய சிம் அட்டை, பாகிஸ்தானில் உள்ள ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இலங்கை நபரான முகமது முப்லாலுக்கு வழங்கியுள்ளார்.
இந்த முறைகேடுகள் குறித்து தகவல் கிடைத்ததும், 2021ஆம் ஆண்டு ராமநாதபுரம் கியூ பிரிவு பொலிஸார் இவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில்இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மெஹபூப் அலி கான், இலங்கை தம்பதிக்கு தலா 2 ஆண்டுகள் சிறையும், 5,000 இந்திய ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
உடந்தையாக இருந்த அப்துல் ரஷீத்திற்கு 3 ஆண்டுகள் சிறையுடன் 15,000 இந்திய ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam