யாழில் ஹெரோயினுடன் இரு பெண்கள் கைது
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றஞ்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றுமுன் தினம் (03.10.2022) நடந்துள்ளது.
ஹெரோயினுடன் கைது
மணியந்தோட்டம் பகுதியில் 5.5 கிராம் ஹெரோயினுடன் 36 வயதான பெண்ணொருவரும், கொக்குவில் பகுதியில் 2.5 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வட மாகாணத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை
இந்நிலையில் வட மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் தேசிய மட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.