போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் கைது
மட்டக்களப்பு - பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் இரு பெண்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று (22) இரவு வாழைச்சேனை
பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார்
பிறைந்துறைச்சேனையில் குறித்த வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 31 வயதுடைய பெண் ஒருவரை 23 கிராம் கேரளா கஞ்சாவுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து குறித்த பகுதியிலுள்ள மற்றுமொரு வீட்டை முற்றுகையிட்டபோது ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



