யாழில் சட்டவிரோத மரக்குற்றிகளை வைத்திருந்த இருவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) - மானிப்பாய் பகுதி வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் பாலை மற்றும் முதிரை குற்றிகளைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இருவரை யாழ். மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து மரக்குற்றிகள் வெட்டப்பட்டு வருவதாக வனவள பாதுகாப்பு திணைக்களத்துக்குக் கிடைத்த இரகசிய புலனாய்வு தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கையை வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருடன் இணைந்து விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 30 முதிரை மரக்குற்றிகளும் 33 பாலை மர தீராந்திகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், கைது செய்யபட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
