வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பயங்கரவாதத்துடன் தொடர்புடைய இருவர் கைது
ஐக்கிய அரபு எமிரகத்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 44 வயதுடைய நபர் ஒருவர் மாவனெல்ல பயங்கரவாத விசாரணை பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதம் பரப்பிய குற்றச்சாட்டிற்கமைய கைது செய்யப்பட்ட நபர் மாவனெல்ல பிரசேத்தை சேர்ந்தவராகும். அவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி அமீரகத்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயங்கரவாதம் பரப்பிய குற்றச்சசாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றுமொரு நபர் பயங்கரவாத விசாரணை பிரிவின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளார்.
அவர் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையராகும். சந்தேக நபர் மட்டக்களப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட பல விசாரணைகளின்ன பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
