10 வயது இளம் பிக்குவை தகாத முறைக்கு உட்படுத்திய இருவர் கைது
இளம் பிக்கு ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீஹகதென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விகாரை ஒன்றின் விகாராதிபதி உட்பட மூவர் 10 வயதான பிக்குவை தகாத முறைக்கு உட்படுத்தியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரிலே 20 மற்றும் 17 வயதுடைய இருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இதன் போது மீஹகதென்ன கும்ஒதுவ மற்றும் களுபஹன பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் இருவரை விகாரைக்கு அழைத்து வந்த விகாராதிபதி புதிய தேரரை தகாத முறைக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்துக்குரிய விகாராதிபதி தற்போது சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் அவர் நாடு திரும்பியதும் விசாரணை நடத்தப்படும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு : கோட்டாபயவின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri
