பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் கலந்துக்கொள்ள சென்ற இரண்டு பேரை காணவில்லை
இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் 22 வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் 5 வது நாள் நிகழ்வுகளுக்கு பின்னர், இலங்கை வீராங்கனை ஒருவரும், உயர் அதிகாரி ஒருவரும் காணாமல் போயுள்ளனர்.
திங்கள் கிழமை நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து பெண் ஜூடோ வீரங்கனையும் அணியின் முகாமையாளரும், இலங்கை அணி முகாமில் இருந்து காணாமல் போயுள்ளனர்.
விளையாட்டு வீரர்களில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ள அதிகாரி
இவர்கள் காணாமல் போனமை குறித்து இலங்கை அணியின் நிர்வாகிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். பெர்மிங்ஹாம் நகர பொலிஸார் சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை அணிகளின் வீரர்கள் காணாமல் போவதை தடுப்பதற்காக இலங்கை வீரர்களின் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக இலங்கை அணிகள் அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜூடோ அணியின் மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களுடன் 110 விளையாட்டு வீரர்கள், 51 அதிகாரிகள் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் கலந்துக்கொள்ள சென்றுள்ளனர். இலங்கை விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 180 நாள் விசா வழங்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மனைவி தீபிகாவுக்கு தினேஷ் கார்த்திக் தந்த முதல் ரியாக்ஷன்! புகைப்படம் News Lankasri

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

பிரித்தானிய மகாராணியால் போரை அறிவிக்க முடியும்! பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் சுற்றலாம்.. சக்திவாய்ந்த பெண் News Lankasri

எனது குரல் செட் ஆகவில்லை! ஷங்கர் மகளின் வாய்ப்பு குறித்து வருத்தத்துடன் ராஜலட்சுமி விளக்கம் Manithan
