நாட்டில் இடம்பெற்ற இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி
ஹொரணை மற்றும் தெலிக்கட தொடங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர், உயிரிழந்துள்ளனர்.
புளத்சிங்கள - மானான பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய வயோதிய பெண் ஒருவரும், ஹேகொட, புஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவருமே நேற்றைய விபத்துக்களில் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
புளத்சிங்கள வீதியின் பெல்லபிடிய சந்திக்கு அருகில், ஹொரணை பகுதியில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில், குறித்த பேருந்தின் இருந்து இறங்கிய பெண் பேருந்துக்கு முன் பக்கமாக வீதியை கடக்க முற்பட்ட போது அதே பேருந்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
மேலும், தொடங்கொட, தெலிகட பிரதேசத்தில் இராணுவத்திற்கு சொந்தமாக கனரக வாகனம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
