இந்தியாவில் கடும் வெப்பத்தினால் 24 மணி நேரத்திற்குள் 85 உயிரிழப்புக்கள்
இந்தியாவில் (India) நிலவி வரும் கடும் வெப்பநிலை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் ஒடிசா (Odisha), பீகார் (Bihar), ஜார்க்கண்ட் (Jharkhand), இராஜஸ்தான் (Rajasthan) மற்றும் உத்தரப் பிரதேசம் (Uttar Pradesh) ஆகிய மாநிலங்களிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக, ஒடிசா மாநிலத்தில் அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் வெப்பநிலை
மேலும், பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் 44 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன் தொடர்ந்தும் இந்நிலை அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடும் வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் நிலவி வருவதுடன் அப்பகுதி மக்கள் அதிக பாதிப்பினை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
