கிளிநொச்சியில் இடம்பெற்ற இரு வேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு
கிளிநொச்சியில் (Kilinochchi) இடம்பெற்ற இரு வேறு வீதி விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன் பகுதியில் நேற்றிரவு (04.09.2024) வேகக் கட்டுப்பட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
கிளிநொச்சி பொது வைத்தியசாலை
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய சகோதரன் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது உருத்திரபுரத்தைச் சேர்ந்த வைகுந்தவாசன் குமணன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் நேற்றிரவு ( 04.09.2024):இடம்பெற்ற மற்றுமொரு வீதி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
கிளிநொச்சியிலிருந்து உருத்திரபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் அருகில் உள்ள வாய்க்கால் ஒன்றுக்குள் விழுந்து குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது சந்திரசேகரம் புவனேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இரு சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
குறித்த விபத்துக்கள் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 17 மணி நேரம் முன்

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா... புதிய ஜோடி, புரொமோ இதோ Cineulagam
