திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 43 பேர்! வெளியான காரணம்
பாதுக்க வடரேக பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரண உற்பத்தி நிறுவனமொன்றின் 43 ஊழியர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு நேற்று(04) வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகவே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயிற்றில் பிரச்சினை
குறித்த ஊழியர்கள் நிறுவனத்தில் உள்ள சிற்றுண்டிசாலையிருந்து காலை உணவு சாப்பிட்ட பிறகு, அவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் 20 - 40 வயதுக்கு இடைப்பட்ட இருபத்தைந்து பெண்களும், பதினெட்டு ஆண்களும் இச்சம்பவத்திற்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam