திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 43 பேர்! வெளியான காரணம்
பாதுக்க வடரேக பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரண உற்பத்தி நிறுவனமொன்றின் 43 ஊழியர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு நேற்று(04) வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகவே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயிற்றில் பிரச்சினை
குறித்த ஊழியர்கள் நிறுவனத்தில் உள்ள சிற்றுண்டிசாலையிருந்து காலை உணவு சாப்பிட்ட பிறகு, அவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் 20 - 40 வயதுக்கு இடைப்பட்ட இருபத்தைந்து பெண்களும், பதினெட்டு ஆண்களும் இச்சம்பவத்திற்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam