இலங்கைக்கு வந்த மேலும் இரு ஜெட் விமானங்கள் - பின்னணி என்ன?(Photos)
ஹம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் (Mattala Rajapaksa International Airport) இரண்டு ஜெட் விமானங்கள் தரையிறங்கியுள்ளன.
இந்த ஜெட் விமானங்களின் புகைப்படங்கள் மத்தள விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதில் Gullivair என்ற விமானம் பல்கேரியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்துள்ளது.
அத்துடன் மத்தள விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர், அதிகளவான பயணிகளை இந்த ஆண்டிலேயே கையாண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் மத்தள விமானத்தின் முகநூல் பக்கத்தில் மூன்று விமானங்களின் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.