இலங்கையிலிருந்து மேலும் இருவர் இந்தியாவில் தஞ்சம் (Photo)
யாழ்ப்பாணம் – குருநகரை சேர்ந்த இளைஞர்கள் இருவர் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அன்றாட அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை கிடுகிடு என உயர்ந்து மக்கள் ஒரு வேளை உணவுக்கே திண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அரசுக்கு எதிராக இலங்கையில் உள்ள பொதுமக்கள் வீதியில் இறங்கி கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து கடந்த மாதத்திலிருந்து 16 குடும்பத்தைச் சேர்ந்த 75 நபர்கள் தனுஷ்கோடி பகுதிக்குத் தஞ்சமடைந்ததை அடுத்து, அவர்கள் உரிய விசாரணைக்குப் பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை மேலும் இருவர் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குக் கடல் கடந்து வந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.
தமிழக பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.


பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
