நாடு கடத்தப்பட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்..!
பயங்கரவாத கருத்துக்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
காத்தான்குடி மட்டக்களப்பை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் 21ம் திகதி கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆறுபேர் கொண்ட குழுவை சேர்ந்தவர்களே இவர்கள் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வஹாபிசத்தையும் பயங்கரவாதத்தையும் பரப்புவதற்காக வட்ஸ்அப்பினை பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இந்த குழுவை சேர்ந்த நால்வர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆறு பேரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஜஹ்ரான் ஹாசிம் தொழுகையில் ஈடுபடும் வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவு செய்தனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 6 மணி நேரம் முன்

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam
