ஓமந்தையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயம்
வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிகெய்தகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிள்,பட்டா ரக வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒமந்தை, பன்றிகெய்தகுளம் ஏ9 பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற இவ்விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பன்றிகெய்தகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்களின் பின்புறமாக வந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில், ஓமந்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




