சுயாதீன தடுப்பூசி ஆலோசனை நிபுணர் குழுவிலிருந்து இருவர் ராஜினாமா
சுயாதீன தடுப்பூசி ஆலோசனை நிபுணர் குழுவில் இருந்து மேலும் இரண்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
தனிப்பட்ட மற்றும் அதிக வேளைப்பளு"என்ற காரணம் காட்டியே அவர்கள் குழுவில் இருந்து விளங்கியுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் குழுவிலிருந்து கொழும்பு வடக்கு (ராகம) மருத்துவ பீடத்தின் பேராசிரியர் ஏ. பத்மேஸ்வரன் (சமூக மருத்துவர்) விலகினார்.
இதனையடுத்து ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவ அறிவியல் பீடத்தின் பேராசிரியர் நீலிகா மாவளகே கடந்த வாரம் விலகினார்.
எட்டு உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு மட்டுமல்லாமல், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின் பணிநீக்கம் மற்றும் பதவி விலகல்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.
பேராசிரியர் பத்மேஸ்வரன் மற்றும் பேராசிரியர் மாளவிகேக்கு முன்னர், நிபுணர் குழுவில் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமா (மருத்துவர்), வைத்தியர் ராஜீவ டி சில்வா (நோயெதிர்ப்பு நிபுணர்), காந்தி நாணயக்கார (வைராலஜிஸ்ட்), பேராசிரியர் சன்ன ரணசிங்க (சுவாச மருத்துவர்),வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ (குழந்தை மருத்துவர்) மற்றும் வைத்தியர் ஹசித திசெரா (தொற்றுநோயியல் நிபுணர்). ஆகியோரும் விலகியவர்களில் அடங்குகின்றனர்.
முன்னதாக, 3 ஆம் கட்ட சோதனைகளில் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த தரவு இல்லாமல் சினோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பதற்கான முரண்பாட்டின் போது சிலர் விலக்கப்பட்டனர்.
இதற்கிடையில், இலங்கையின் கோவிட் -19 அவசரகால பதில் மற்றும் சுகாதார அமைப்புகள் தயாரிப்பின் திட்ட இயக்குநர் வைத்தியர் ஜெயசுந்தர பண்டார கடந்த வாரம் தனது பதவியில் இருந்து விலகினார்.