பயணத்தடை நீக்கம்-இரண்டரை மாதங்களின் பின்னர் தூர இட போக்குவரத்து ஆரம்பம்
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கப்பட்டதையடுத்து கிழக்கு மாகாணத்திலிருந்து தூர இடங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் இன்று(01) ஆரம்பமாகின.
மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து இன்று காலை யாழ்ப்பாணம் , பதுளை, மன்னார், கொழும்பு, ஆகிய இடங்களுக்கான பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை மட்டக்களப்பு டிப்போ முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
பயணிகள் அனைவரும் கோவிட் சுகாதார நடை முறைகளைப் பேணி பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
கைகளைச் சுத்தம் செய்து, முகக்கவசம் அணிந்து, சமுக இடை வெளிகளைப் பேணி பேருந்துகளில் பயணிகள் பயணித்ததை அவதானிக்க முடிந்துள்ளது.