டிக்கோயா நகரில் பதற்றமான சூழ்நிலை.. கூரிய ஆயுதங்களுடன் தாக்கப்பட்டு இருவர் படுகொலை
புதிய இணைப்பு
டிக்கோயா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் 84 வயது மதிக்கத்தக்க தம்பதியே வெட்டுக் காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், ஹட்டன் பொலிஸார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதில் கணவன் கட்டிலில் வெட்டுக்காயங்களுடனும் மனைவி மாடிப்படியருகிலும் வெட்டுக்காயங்களுடன் காணப்படுவதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை.
அதிகாரிகளை தாக்க முயன்ற ராஜபக்சக்களின் தீவிர விசுவாசி.. 12 வருடங்களுக்கு பிறகு நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு
முதலாம் இணைப்பு
டிக்கோயா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இருவர் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு வயதானவர்களே குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த வர்த்தக நிலையத்தில் இருவரின் சடலங்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் இருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.