கூலிப்படையாக அனுப்பப்பட்ட இலங்கை இராணுவத்தினர்: சிஐடி விசாரணையில் அம்பலம்
ரஷ்ய-உக்ரைன் போர்முனைகளுக்கு இலங்கை இராணுவத்திரை அனுப்பிய குற்றச்சாட்டில், இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரும் , இராணுவ சார்ஜண்ட் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் பிரதேசத்தில் வைத்து இன்று மாலை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ரஷ்ய-உக்ரைன் போர்முனை
இலங்கை இராணுவ சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகளை ரஷ்ய-உக்ரைன் போர்முனைகளுக்கு கூலிப்படையாக அனுப்பி வைப்பதற்கான தரகர்களாக செயற்பட்ட குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கும் எதிரான விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
