வரி கோப்புக்களை பதிவு செய்யாத கனேடியர்களுக்கு விசேட அறிவுறுத்தல்
வரி கோப்புக்களை பதிவு செய்யாதோருக்கு விசேட அறிவுறுத்தல் ஒன்றை கனேடிய வருமான முகவர் நிறுவனம் விடுத்துள்ளது.
இவ்வாறு வரிக்கோப்புக்களை தாக்கல் செய்யத் தவறும் கனேடியர்களுக்கு அரசாங்கத்தின் எவ்வித சலுகைகளும் கிடைக்கப் பெறுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏழு மில்லியன் கனேடியர்கள் வரி கோப்புக்களை பதிவு செய்யத் தவறியுள்ளதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மொழிப் பிரச்சினை
இதன்படி நாட்டில் சுமார் பத்து வீதமான கனேடியர்கள் வரி கோப்புக்களை பதிவு செய்வதே இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மொழிப் பிரச்சினை அல்லது அறியாமை காரணமாக இவ்வாறு வரி செலுத்துவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் வழங்கப்பட்டுள்ள வரிக் கோப்புக்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என கனேடிய வருமான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri