ஹெரோயின் போதைப்பொருளுடன் மீன் வியாபாரிகள் இருவர் கைது
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யான் ஓயா பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடியில் வாகனங்களைச் சோதனையிட்ட போது ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு மீன் வியாபாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் - திருகோணமலை பிரதான வீதி யான்ஓயா பகுதியில் பொலிஸார் இன்று (20) காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பொறுப்பதிகாரி லக்மால் விஜயரத்னவின் ஆலோசனையின் பேரில் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ரோஹன குமார மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது குறித்து இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும், இவர்களிடம் இருந்து 1150 மில்லிகிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வென்னப்புவ மற்றும் மாரவில பகுதியைச் சேர்ந்த 38, 40 வயது உடையவர்கள் எனவும் தெரியவருகின்றது.
வென்னப்புவ பிரதேசத்திலிருந்து திருகோணமலைக்குக்
கடல்மீன் எடுப்பதற்காக லொறியில் வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும் கெப்பித்திக்கொள்ளாவ நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam