உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்தாரிகளின் தந்தை மற்றும் சகோதரனுக்கு பிணை!
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு அன்று கொழும்பில் உள்ள இரண்டு முன்னணி விருந்தகங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கு காரணமான காரணமான மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஷாப் ஆகியோரின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவான் நவரத்ன மாரசிங்கவினால் அவர்கள் இருவரும் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இருவரும் தலா .200,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களது கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டது.
தந்தையான மொஹமட் இப்ராஹிம் மற்றும் அவரது மகன் ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மாதாந்தம் முதல் மற்றும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை வழக்கின் மூன்றாவது சந்தேக நபரான குடும்பத்தில் உள்ள மற்றுமொரு சகோதரனுக்கான பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.