நாட்டில் இருவேறு பகுதிகளில் யானை தாக்கியதில் இருவர் பலி
அம்பாறை - மஹாஓயா, குருநாகல் - ஹதுன்கம ஆகிய பிரதேசங்களில் காட்டு யானைகள் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
அந்தவகையில் மஹாஓயா, பொரபொல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 82 வயதுடைய
முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர், யாக்கினிகல மலை பகுதிக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஹதுன்கம யானை தாக்குதல்
அதேவேளை ஹதுன்கம, ஹிம்பிலியாகட பகுதியில் காட்டு யானை தாக்கி 53 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் அருகில் உள்ள வீட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற அவர், வீடு திரும்பாத நிலையில் பிரதேசவாசிகள் மற்றும் வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின்போதே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
