ஒரே தொடருந்தில் பதிவான இரு உயிரிழப்புக்கள்
கண்டியிலிருந்து கொழும்பு - கோட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தொடருந்தில் இரு வேறு இடங்களில் இருவர் மோதி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் நேற்று(30) இடம்பெற்றுள்ளன. இன்று காலை 8.45 மணியளவில், ராகமையிலுள்ள கடவை ஒன்று மூடப்பட்டிருந்தபோது, கடவையைக் கடக்க முற்பட்ட இளைஞன் ஒருவர் தொடருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.
ராகமை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
குடும்பஸ்தர் உயிரிழப்பு
இந்த விபத்தையடுத்து அந்த தொடருந்து மீண்டும் கொழும்பு - கோட்டை நோக்கி அதன் பயணத்தைத் தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், ராகமை - துடுவேகெதர பகுதியில் வைத்து அதே தொடருந்தில் மற்றுமொரு நபர் மோதி உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் சிக்கி 50 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
