இரு வேறு இடங்களில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை
கிளிநொச்சியில் இரு வேறு இடங்களில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு குற்றவாளிகளுக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார் அவர்களுக்கெதிராக வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிபை்படுத்திய நிலையில் நேற்று (23)வரை இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
நேற்றைய தினம் பிற்பகல் குறித்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றில் நீதவான் பீ.ஆர் ஸ்மாத் ஜெமில் முன்னிலையில் முன்னிலப்படுத்தப்பட்டதுடன் குற்றச்சாட்டு பத்திரம் வாசித்துக் காட்டப்பட்டது.
குறித்த இரண்டு வழக்குகளிலும் சந்தேக நபர்கள் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதை அடுத்து இரண்டு பேருக்கும் ஒரு மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் பொலிஸாரால் கஞ்சாவுடன் கைது
செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிபிடத்தக்கது.