ரஞ்சன் எம்.பிக்கு எதிரான இரண்டு வழக்குகளை மீளப் பெறுவதாக அமைச்சர் அறிவிப்பு!
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக நுகேகொட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகளை மீள பெற அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே முடிவு செய்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீதான அனுதாபத்தின் அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றங்களில் ஆஜராக முடியாது என்று கூறிய அமைச்சர், தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர் வழக்குகளை மீளப்பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலுக்கு தான் இலக்காகியிருந்தாலும், அதற்கு பதிலாக தான் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட போவதில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அண்மையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam