பிரித்தானியாவில் மர்ம கும்பலொன்றில் கொடூர தாக்குதலில் பலியான சிறுவர்கள்! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
பிரித்தானியாவில் மர்ம கும்பலொன்றினால் இன்று மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில், Brentwood நகரத்தில் உள்ள Regency Court பகுதியில் மர்ம கும்பலொன்றினால் 3 பேர் கொடூரமாக தாக்கப்பட்டு ஆபத்தில் உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அவரச உதவிகளுடன் சென்ற பொலிஸார், பாதிக்கப்பட்ட்டவர்களை காப்பாற்ற முயற்சித்த போதிலும், அவர்களில் இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,மற்றுமொரு சிறுவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தினை தொடர்ந்து குறித்த வீதியினை சுற்றிவளைத்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 8 பேரை கைது செய்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மற்றும் புலனாய்வாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும்,மத்திய பிரென்ட்வுட்டில் உள்ள ரீஜென்சி கோர்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளிலும் அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 2 மணி வரை சந்தேகத்தின் படி எதையும் பார்த்தவர்கள் முன்வந்து தகவல் வழங்குமாறு துப்பறியும் தலைமை ஆய்வாளர் ஆண்டி கிளார்க்சன் (Andy Clarkson) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 1 மணி நேரம் முன்

பிரித்தானிய ஏரி ஒன்றில் மர்ம உயிரினம்... சிறுபிள்ளைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் எச்சரிக்கை News Lankasri

பிரபல நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கையில் இருந்து வந்த முக்கிய தகவல்! ஈழமக்கள் சார்பில் நன்றி News Lankasri
