புது வருடத்திற்காக சீனவெடி கொளுத்தி விளையாடிய இரு சிறுவர்கள் வைத்தியசாலையில்
திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேசத்தில் புது வருடத்திற்காக சீனவெடி கொளுத்தி விளையாடிய இரு சிறுவர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில் காயமடைந்த சிறுவர்கள் மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 9 வயது மற்றும் 11 வயது உடையவர்கள் எனவும் தெரியவருகின்றது.
2021ஆம் ஆண்டை வரவேற்கும் முகமாக சீன வெடிகளை கொளுத்தி கொண்டிருந்த வேளையில் தீ கையில் பட்டதால் இரு சிறுவர்களும் காயங்களுக்கு இலக்காகி மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இதேவேளை மது போதையில் மோட்டார்சைக்கிளில் பயணித்த கோமரங்கடவல - ரிதீபுர பகுதியைச் சேர்ந்த இருவர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு இலக்காகியுள்ளனர்.
காயமடைந்த குறித்த இருவரும் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 32 மற்றும் 34 வயது உடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.