வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது
வவுனியாவில் இரு இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, தேணிக்கல் பகுதியில் கடந்த வாரம் வயது போன ஒரு முதியவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து பயணித்த இளைஞர்கள் இருவர் அவர் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துச் சென்றனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட முதியவர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, தோணிக்கல் மற்றும் சிறிராமபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 25 ஆகிய வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளதுடன், பசார் வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நிலையில் 6 அரைப் பவுண் சங்கிலியையும் மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த பெண் பட்ட கஷ்டங்கள்... இன்று அவரது பேத்தி மேற்கொண்டுள்ள நல்ல முயற்சி News Lankasri

லண்டனில் இறுதிச்சடங்கு மையத்தில் வைக்கப்பட்டிருந்த முதியவரின் உடல்... காணச் சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

ஈழத்தமிழர் வைத்த இரவு பார்ட்டி ! பிரபுதேவாவின் 2 ஆவது மனைவியுடன் ரம்பாவின் குடும்பம்...லீக்கான புகைப்படம் Manithan

தொகுப்பாளினி பிரியங்காவின் அப்பாவா இது? ஹீரோ போல இருக்காரு...குட்டி ஏஞ்சல் பிரியங்காவின் அரிய புகைப்படம் Manithan

விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம் News Lankasri
