மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்ட இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள்
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு பொலிஸாரினால் இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான குழுவினர் இரண்டு வீடுகளில் முன்னெடுக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி நிலையங்களை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது உற்பத்தி செய்யப்பட்ட 30000 மில்லி லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதுடன், கசிப்பு உற்பத்தி செய்வதற்கான பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையினை தடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.







Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri
