யாழில் வெவ்வேறு பகுதிகளில் போதைப்பொருளுடன் இருவர் கைது
யாழ்.தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் சந்தி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் நேற்றைய தினம் (14.06.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏழாலை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவர். அவரிடமிருந்து 1கிராம் 380 மில்லிக்கிராம் ஹெரோயினை கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸார் நடவடிக்கை

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்.அச்சுவேலி
யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசுவன் சந்தியில் வைத்து 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது இன்று (15.06.2023) காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை

அச்சுவேலி பகுதியிலிருந்து ஊரெழு பகுதிக்கு 3,000 மில்லிலீற்றர் கசிப்பினை எடுத்து சென்றபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam