மட்டக்களப்பு சீயோன் தேவாலய பகுதியில் கைதானவர்களுக்கு பிணை
புதிய இணைப்பு
மட்டக்களப்பு சீயோன் தேவாலய பகுதியில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சந்தேகத்திற்கிடமான முறையில் நடனடமாடியதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் விசாரணைகளின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு சீயோன் தேவாலய பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் குறித்து வெளிநாட்டு தூதரகங்கள் விடுத்துள்ள பயண எச்சரிக்கைக்கு அமைய கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
இந்த நிலையில் விசேட கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு தரப்பினரால் குறித்த இருவரும் சந்தேகத்திற்கிடமான முறையில் கைதுசெய்யப்பட்டுஉள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் பொலிஸார் இதுவரையில் எந்தவிதமான தகவலையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், தற்போது சீயோன் தேவாலய பகுதியில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - பவன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri