வவுனியாவில் வாள்களுடன் அட்டகாசம் செய்த இருவர் கைது!
வவுனியாவில் வாள்களுடன் அட்டகாசம் புரிந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தின் முன்நின்ற இளைஞர்கள் மீது புதன்கிழமை மாலை வாள் வீசி சிலர் அட்டகாசம் செய்துள்ளனர்.
இதன்போது நிலமையை கட்டுப்படுத்த முயன்ற புலனாய்வு துறையைச் சேர்ந்த ஒருவர் மீதும் வாள் வீசி தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றதும் வாள்களுடன் நின்றவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் களமிறங்கிய விசேட அதிரடிப்படையினர் சம்பவத்துடன் தொடர்புடைய தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்து வவுனியா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மற்றுமொரு நபர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, விசேட அதிரடிப்படையினர் வவுனியா வைவரவபுளியங்குளம் பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam
