யாழில் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சங்கத்தானை மடத்தடியில் உள்ள வீட்டில் நேற்றுமுன்தினம் இரவு இடம் பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்> நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லத வேளை வீட்டில் இருந்த தொலைகாட்சி உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அன்றையதினம் இரவே வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றில் முன்னிலை
இந்நிலையில் துரிதகதியில் விசாரணைகளை ஆரம்பித்த சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உப பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு குடத்தனை பொற்பதி பகுதியில் உள்ள வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட பொருட்களுடன் அதே பகுதியை சேர்ந்த 24, 28 வயதான இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



