கசிப்பு விற்பனையில் ஈடுப்பட்ட இருவர் கைது (Video)
கிளிநொச்சியில் கசிப்பு விற்பனையில் ஈடுப்பட்ட இருவரை தருமபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்மடு நகர் பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனை நடைபெறுவதாக தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்றைய தினம் சுற்றிவளைப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை ஊழவனுர் பகுதியிலும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்களிடமிருந்து 33 லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தருமபுரம் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |


Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam