யாழ். சுழிபுரத்தில் வாள் மற்றும் கசிப்புடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) -வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரத்தில் வாள் மற்றும் கசிப்புடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (10) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, சுழிபுரம் - பெரியபுலோ பகுதியில் வாளுடன் 17 வயது மாணவன் ஒருவனும், சுழிபுரம் - வறுத்தோலை பகுதியில் 43 வயதுடைய நபர் ஒருவர் ஒரு போத்தல் கசிப்புடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இன்றையதினம் (11) யாழ்.நகரில் 60 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri