புதையல் பொருளொன்றினை கடத்த முற்பட்ட இருவர் கைது (VIDEO)
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் பொருளொன்றினை கடத்த முற்பட்ட இருவரை நேற்றிரவு(18) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் மற்றும் குருணாகல் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர்கள் புதையலில் பெறப்பட்ட பழங்கால பொருளொன்றினை திருகோணமலை பகுதியிலிருந்து கொழும்புக்கு கடத்துவதற்கு முயன்ற நிலையிலே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மறைந்திருந்து சுற்றிவளைப்பு மேற்கொண்டு சந்தேக நபர்களை ஐந்து மில்லியன் ரூபாய் பெறுமதியான புதையல் பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொல் பொருள் தொடர்பான அறிக்கைகளைப் பெறவுள்ளதோடு,
சந்தேக நபர்கள் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை
மேற்கொண்டு வருவதோடு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிறுத்த
உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



