இணையம் வழியாக சிறுமி விற்பனை - பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் கைது
இணையம் மூலம் 15வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரையும் ஜூலை 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே இருதயநோய் நிபுணர் உட்பட இதுவரை 33க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மாலைத்தீவு முன்னாள் ராஜாங்க அமைச்சரும் ஒருவரும் அடங்குகிறார்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் சிறுமியின் தாய், மிஹிந்தலை பிரதேச சபையின் துணைத் தலைவர் மற்றும் ஒரு கப்பலின் கேப்டன் ஆகியோரும் அடங்குவர்.
மூன்று சக்கர வண்டி ஓட்டுநர், ஒரு கார் ஓட்டுநர் மற்றும் சிறுமியை பாலியல் ரீதியாக விற்கப் பயன்படும் வலைத்தளத்தை வடிவமைப்பதில் ஈடுபட்டவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த 15 வயது சிறுமி இணையம் வழியாக பாலியல் தொடர்பாகப் பல வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10,000, ரூ. 15,000 மற்றும் ரூ. 30,000 என மூன்று மாத காலப்பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
