மட்டக்களப்பில் சட்டவிரோதமாக பறவைகளை கொலை செய்த இருவர் கைது
மட்டக்களப்பு (Batticaloa) - கடுக்காமுனைப் பகுதியில் சட்டவிரோதமாக பறவைகளை கொலை செய்த குற்றச்சாட்டில் இரு சந்தேக நபர்களை கொக்கட்டி சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இக்கைது நடவடிக்கை நேற்று 902) பிற்பகல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலநிலை மாற்றத்தால் இடம்பெயர்ந்து வரும் வெளிநாட்டு அரிய வகை சுற்றுலா பறவைகள் இலங்கையின் பல்வேறு இடங்களில் தமது வாழ்க்கையை கழிப்பது வழக்கம்.
இடம்பெயர் பறவைகள்
இவ்வாறு இடம் பெயர்ந்து வரும் பறவைகளை சட்டவிரோதமாக கொலை செய்து வியாபாரப்படுத்தும் பல சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்வது நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், கொக்கடிச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பயணித்த வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றினுள் தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளும் கொலை செய்யப்பட்ட பறவைகளும் மீட்கப்பட்ட நிலையில் பொலிஸார் சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டி சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
