பாதாள உலகக்குழுவிற்கு போலி ஆவணங்களை வழங்கிய இருவர் கைது
பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்காக போலி ஆவணங்களை தயாரித்து வழங்கிய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போலி ஆதன வரி சான்றிதழ்கள், காப்புறுதி சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் கூரிய ஆயுதங்களையும் இந்த நபர்கள் பாதாள உலகம் குழுவினர்களுக்கு வழங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் வைத்து இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் மன்னா சாந்த என அழைக்கப்படும் பாதாள உலகம் குழு உறுப்பினரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேக நபர்களிடமிருந்து ஆதன வரி சான்றிதழ்கள், காப்புறுதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களும் ஹெரோயின் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தையில் அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்களினால் உருவாக்கப்பட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam