பாதாள உலகக்குழுவிற்கு போலி ஆவணங்களை வழங்கிய இருவர் கைது
பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்காக போலி ஆவணங்களை தயாரித்து வழங்கிய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போலி ஆதன வரி சான்றிதழ்கள், காப்புறுதி சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் கூரிய ஆயுதங்களையும் இந்த நபர்கள் பாதாள உலகம் குழுவினர்களுக்கு வழங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் வைத்து இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் மன்னா சாந்த என அழைக்கப்படும் பாதாள உலகம் குழு உறுப்பினரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேக நபர்களிடமிருந்து ஆதன வரி சான்றிதழ்கள், காப்புறுதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களும் ஹெரோயின் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தையில் அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்களினால் உருவாக்கப்பட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது.
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri