ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலோன் மஸ்க் - பயனாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளரான எலோன் மஸ்க் தொழில்நுட்ப நிறுவனத்தை வாங்கியதில் இருந்து ட்விட்டர் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை இழந்திருக்கலாம் என தரவு நிறுவனம் ஒன்றினால் கண்டறியப்பட்டுள்ளது.
டுவிட்டர் தவறான நடத்தையை கண்காணித்து வருகிறது
Bot Sentinel நிறுவனம், 3.1 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் மற்றும் அவற்றின் தினசரி செயல்பாடுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தவறான ட்விட்டர் நடத்தையை கண்காணித்து வருகிறது.
இதன்படி, ஒக்டோபர் 27 மற்றும் நவம்பர் முதலாம் திகதிக்கு இடையில் 877,000 கணக்குகள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் மேலும் 497,000 கணக்குகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் Bot Sentinel நம்புகிறது, இது வழக்கமான எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்று டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
ட்விட்டரை நீக்குவது எப்படி
'மக்கள் தங்கள் கணக்குகளை செயலிழக்கச் செய்வதையும், ட்விட்டர் கணக்குகளை இடைநிறுத்துவதையும் நாங்கள் அவதானித்துள்ளோம்' என்று பாட் சென்டினலின் நிறுவனர் கிறிஸ்டோபர் பௌஸி கூறியுள்ளார்.
ட்விட்டரில் தற்போது சுமார் 237 மில்லியன் 'பயனர்கள்' உள்ளனர் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில், ஒக்டோபர் 24ம் திகதி முதல் அக்டோபர் 31ம் திகதி வரை, 'ட்விட்டரை நீக்குவது எப்படி' என்ற தேடல்கள் 500 சதவீதம் அதிகரித்துள்ளதாக,
பாதுகாப்பு நிறுவனமான VPNOverview கண்டறிந்துள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
