இலங்கையிலுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் தமிழக வெற்றிக் கழகம்
மலையகத் தோட்டத் தமிழ் மக்களுக்கு இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகும் நில உரிமைகள் வழங்கப்படவில்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் இலங்கைக்கான அமைப்பாளர் எஸ்.தனுசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வேலைத்திட்டம்
கிழக்கு மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகள், போரின்போது காணாமல் போனவர்களின் பிரச்சினைகள், மொழி தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.
இலங்கையின் அனைத்து இளைஞர்களையும் எங்கள் இந்த வேலைத்திட்டத்துடன் இணைந்து முன்னேற அழைக்கிறேன்.
இளைஞர்களாகிய நாம், இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு உத்தியைக் கண்டுபிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நமது அமைப்பின் முக்கிய நோக்கம், நமது பிரச்சினைகளைப் பற்றி மற்ற நாடுகளுடன் விவாதிப்பதும், அவற்றைப் புரிந்துகொள்வதும், அவர்களின் ஆதரவைப் பெறுவதும் ஆகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.



